ஜே.வி.பி. தூதுக்குழு இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது
"தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த அமைப்பின் கீழ் இயங்கும் பாரிய கட்சியான ஜே.வி.பி.யின் தூதுக்குழு இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாளை (திங்கட்கிழமை) கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு புறப்படவுள்ளது.
இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு எதிராக 1987-90 இல் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய மார்க்சிச-லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தூதுக்குழு திங்கட்கிழமை (பிப்ரவரி 05) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
"தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த அமைப்பின் கீழ் இயங்கும் பாரிய கட்சியான ஜே.வி.பி.யின் தூதுக்குழு இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாளை (திங்கட்கிழமை) கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு புறப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் அடங்குகின்றனர்.