ஒன்றாரியோ பொதுத் தணிக்கையாளரின் கேள்விகளைத் தவிர்க்க 2வது சொத்துமேம்படுத்துநர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்
ரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் ரைஸ், ஜூலை 5 அன்று, ஒன்றாரியோ உயர் நீதிமன்றத்திற்கு ஒரு விண்ணப்ப அறிவிப்பை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு தெற்கு ஒன்றாரியோவின் பாதுகாக்கப்பட்ட கிரீன்பெல்ட்டில் இருந்து அகற்றப்பட்ட நிலத்தை வைத்திருக்கும் இரண்டாவது முக்கிய ரொறன்ரோ-பகுதி சொத்துமேம்படுத்துநர் மாகாணத்தின் பொதுத் தணிக்கையாளரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்க நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.
ரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் ரைஸ், ஜூலை 5 அன்று, ஒன்றாரியோ உயர் நீதிமன்றத்திற்கு ஒரு விண்ணப்ப அறிவிப்பை தாக்கல் செய்தார்.
அவரது நீதிமன்றத் தாக்கல் ஆவணத்தில் (இது தி ரொறன்ரோ ஸ்டாரால் வெளியிப்பட்ட முதல் செய்தி), மாகாண அரசாங்க நிதிகளை ஆய்வு செய்வதற்கான பொதுத் தணிக்கையாளரின் (ஆடிட்டர் ஜெனரல்) அதிகாரத்தை அழைப்பாணை மீறுவதாக ரைஸ் வாதிடுகிறார்.
" பொதுத் தணிக்கையாளரின் பங்கு, தனிப்பட்ட குடிமக்களை விசாரணை செய்வது, தணிக்கை செய்வது மற்றும்/அல்லது பிரமாணத்தின் கீழ் ஆய்வு செய்வது அல்லது அவர்களின் தனிப்பட்ட நிறுவன விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது அல்ல" என்று தாக்கல் கூறுகிறது.
கிரீன்பெல்ட் முடிவால் பயனடைந்த மற்றொரு சொத்துமேம்படுத்துநர் - சில்வியோ டி காஸ்பெரிஸ் இதேபோன்ற விண்ணப்பத்தை செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு ரைசின் தாக்கல் வந்தது. டி காஸ்பெரிஸ் வாகன் நரத்தைத் தலையமையிடமாகக் கொண்ட டாக் குழும நிறுவனங்களின் தலைவர்.