உக்ரேனிய ஆளில்லா விமானம் மாஸ்கோவில் கட்டிடத்தை சேதப்படுத்தியது, விமான போக்குவரத்தை சீர்குலைத்தது: ரஷ்யா
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாஸ்கோவின் எக்ஸ்போ சென்டர் வளாகத்தின் குடியிருப்பு அல்லாத கட்டிடத்தின் மீது விழுந்த ட்ரோனை வான் பாதுகாப்பு அழித்ததில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று கூறினார்.
"ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று மத்திய மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தில் உக்ரேனிய ஆளில்லா விமானம் ஒன்று மோதியது. இதனால் ரஷ்ய தலைநகரின் அனைத்து சிவிலியன் விமான நிலையங்களிலும் விமானப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாஸ்கோவின் எக்ஸ்போ சென்டர் வளாகத்தின் குடியிருப்பு அல்லாத கட்டிடத்தின் மீது விழுந்த ட்ரோனை வான் பாதுகாப்பு அழித்ததில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று கூறினார்.
எக்ஸ்போ சென்டர் என்பது கிரெம்ளினில் இருந்து 5 கிலோமீட்டர்கள் (3.1 மைல்கள்) தொலைவில் உள்ள கண்காட்சி அரங்குகள் மற்றும் பல்நோக்கு அரங்குகளின் ஒரு பெரிய பரவலான பகுதி.