இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி அமர்வு அறிவிப்பு
புதிய நீதிபதிகள் குழுவை நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்சங்க பந்துல கருணாரத்னவுக்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய புதிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கு 16.11.2023 காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதிகள் டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், புதிய நீதிபதிகள் குழுவை நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்சங்க பந்துல கருணாரத்னவுக்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரின் தீர்மானத்திற்கு அமைய, நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமர்கோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.