Breaking News
தனுஷின் 50-வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகை
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
’பா பாண்டி’ திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இந்த படத்தை இயக்குவதோடு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
இப்படத்தில் 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று, வீட்ல விஷேசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மிகச்சிறந்த நடிகையான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.