Breaking News
ஸ்காபரோ பன்னாட்டு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ரொறன்ரோ வாலிபர் கைது
25 வயது வாலிபர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. அதே நாளில், அவரைக் கைது செய்ய கனடா முழுவதும் பிடியாணை பிறப்பித்தது.
கடந்த மாத இறுதியில் ஸ்காபரோவில் பன்னாட்டு மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று ஒரு செய்தி வெளியீட்டின் படி, ரொறன்ரோவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. அதே நாளில், அவரைக் கைது செய்ய கனடா முழுவதும் பிடியாணை பிறப்பித்தது.
கொல்லப்பட்டவர் நைஜீரியாவைச் சேர்ந்த 28 வயதான இஃபியானிச்சுக்வு ஓசேகே என அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.