எங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தேவை: ஜி ஜின்பிங்கிடம் மாலத்தீவு ஜனாதிபதி கோரிக்கை
புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய மொஹமட் முய்சு, சீனாவை தீவு நாட்டின் "நெருங்கிய" நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடிக்கு எதிராக தனது அமைச்சர்களின் தரக்குறைவான கருத்துக்கள் தொடர்பாக ராஜதந்திர ரீதியிலான சர்ச்சைக்கு மத்தியில் அதிக சுற்றுலாப் பயணிகளை தனது நாட்டிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய மொஹமட் முய்சு, சீனாவை தீவு நாட்டின் "நெருங்கிய" நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட நிலம் மற்றும் கடல் போக்குவரத்து (பெல்ட் அண்ட் ரோடு) முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டங்களைப் பாராட்டிய அவர், "சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பங்காளிகளில் ஒன்றாக உள்ளது" என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் "மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கியுள்ளது" என்று கூறினார். மாலத்தீவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்குமாறு சீனாவை மாலத்தீவு அதிபர் வலியுறுத்தினார்.