'இனப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்': ஐ.நா நோக்கி பயணிக்கும் புலம்பெயர் தமிழர்கள் குழு,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை நோக்கி சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி லண்டனில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த குழுவினர் இம்மாத இறுதியில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC) வளாகத்தில் கூடவுள்ளனர்.
“2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலைகளுக்கு 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் தங்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடுகிறார்கள்.
காணாமல் போனவர்களில் பலர் அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் என” புலம் பெயர் தமிழர்கள் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையிலேயே, இனப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தில் புலம்பெயர் தமிழர்கள் குழு ஐநா நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55வது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது இலங்கை அதன் முன்னேற்றம் குறித்த வாய்வழி புதுப்பிப்பை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.