கோவில்களை அவமதித்ததற்காக ஒருவர் கனடாவில் கைது
ஆகஸ்ட் 12 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையின் சர்ரே பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கனேடிய நாட்டில் உள்ள ஆலயங்களை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கனேடிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 12 அன்று கோயில்கள் அவமதிப்பு செய்யப்பட்ட பின்னர், கலிஸ்தான் ஆதரவு கிராஃபிட்டிகள் சுவர்களில் பூசப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, கனேடிய காவல்துறையால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும்.
ஆகஸ்ட் 12 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையின் சர்ரே பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், “ஒருவர் இரண்டு முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் வேறொரு தேதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக அவர் விடுவிக்கப்பட்டார்.