கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை: கயந்த கருணாதிலக எம்.பி
2025.10.10 ஆம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, 2025.10.17 ஆம் திகதியன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டிருந்தது.
கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரையில் குழு நியமிக்கப்படவில்லை. ஆகவே கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுங்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025அன்று நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்குமாறு 2025.10.07 ஆம் திகதி எதிர்க்கட்சியின் உறுப்பினர் உங்களிடம் (சபாநாயகர்) எழுத்து மூலமாக வலியுறுத்தினார்கள்.
2025.10.10 ஆம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, 2025.10.17 ஆம் திகதியன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் திகதி குறிப்பிடப்படாமல் இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரையில் குழு நியமிக்கப்படவில்லை. ஆகவே கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுங்கள் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இந்த விடயம் குறித்து இவ்வாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என்றார்.





