இனவாத அரசியலுக்கு பலியாக அனுமதிக்கப்போவதில்லை: வடக்கு, கிழக்கிற்கான சிங்கள அமைப்பு அறிவிப்பு
சிலர் தோல்வியடைந்த அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி நடந்து திருகோணமலைமலையை குழப்ப முயலுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்திற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் வந்த சிலர் சிலை அகற்றப்பட்ட விடயத்தை இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சி செய்கின்றார்கள் என்று வடக்கு, கிழக்கிற்கான சிங்கள அமைப்பின் அமைப்பாளர் டபிள்யு வசந்தகுமார தெரிவித்தார்.
திருகோணமலையில் 19-11-2025அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் தோல்வியடைந்த அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி நடந்து திருகோணமலைமலையை குழப்ப முயலுகின்றனர்.இத்தகைய குழப்பவாதிகள் இருவர் கொழும்பில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் இங்கு வந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இங்கு எவ்வித இனப்பிரச்சினையும் இல்லை.இங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் எமக்கோ புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திற்குகோ எதிர்ப்பானவர்கள் எனவே நாட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம்,சிலரின் அரசியல் அபிலாஷைகளிற்கு யாரும் பலியாக வேண்டாம்.அவர்களின் குறுகிய, இனவாத அரசியலுக்கு திருகோணமலையை பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.





