Breaking News
ஆயுத முகாம்களுக்கு அருகில் வசிக்கும் ஈரானியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிப்பு
தெஹ்ரானில் ஆயுத உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் ஈரானியர்களுக்கு இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்ற எச்சரிக்கைகளை வெளியிட்டது.

வெள்ளிக்கிழமை தொடங்கிய ஏவுகணைத் தாக்குதல்களை இரு நாடுகளும் தொடர்ந்து பரிமாறிக் கொண்டதால், தெஹ்ரானில் ஆயுத உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் ஈரானியர்களுக்கு இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்ற எச்சரிக்கைகளை வெளியிட்டது.
"இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தளங்களைத் தாக்கும். தெஹ்ரானிலும் எல்லா இடங்களிலும் ஈரானியப் பாம்பின் தோலை தொடர்ந்து உரிக்கும் – அணுசக்தி திறன்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை குறிவைக்கும்" என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்