Breaking News
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு
செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு கடிதம் எழுதியதாகவும், ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார் என்று கட்சியின் எம்.பி கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு கடிதம் எழுதியதாகவும், ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் காந்தி குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினர் ராகுல் காந்தி ஆவார். அவருக்கு முன்பு அவரது பெற்றோர்களான சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் பதவிகளை வகித்தனர்.