Breaking News
இந்திய பிரதமர் மோடியின் கனடா பயணத்தின் போது காலிஸ்தானியர்கள் சதி திட்டம்
தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக அவர் இன்று கனடா சென்றடைந்தார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸ் நகரில் திரண்டு போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி தற்போது சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக அவர் இன்று கனடா சென்றடைந்தார்.
கனடாவில் தங்கியிருக்கும் காலத்தில், அவர் மார்க் கார்னியுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் உக்ரைன் நாடுகளின் சகாக்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்.