Breaking News
சிறிலங்கா, வியட்நாம் இடையே இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இருதரப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் முன்னிலையில் சிறிலங்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் உடன்படிக்கை மற்றும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் திங்கள் (05) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.