Breaking News
ஈரானில் இருந்து இலங்கையர்களை மீட்க இந்தியா உதவி
இதுவரை, 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மற்றும் எல்லை நகர்வுகள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்,

நேபாளம் மற்றும் சிறிலங்கா அரசாங்கங்களின் முறையான கோரிக்கைகளைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் சனிக்கிழமை, இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களைச் சேர்க்க சிந்து நடவடிக்கையின் கீழ்த் தனது வெளியேற்ற முயற்சிகளை விரிவுபடுத்துவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான ஈரானின் தற்போதைய மோதலில் ஒன்பதாவது நாளை எட்டும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது. ஈரானில் நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து இந்திய அரசால் சிந்து நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதுவரை, 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மற்றும் எல்லை நகர்வுகள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர், முயற்சிகள் தொடர்கின்றன.
இலங்கையர்கள் இந்தியத் தூதகரத்தைத் தொடர்பு கொள்ளலாம்.