மிசிசாகா மாணவர்களை தாக்கி பலவந்தமாக அடைத்து வைத்த ஆசிரியர் கைது
ஆசிரியர் நான்கு மாணவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று வெளியேற விடாமல் தடுத்தார்.

மிசிசாகா சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மிசிசாகா ஆசிரியர் ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பீல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் 2024-2025 கல்வியாண்டில் அட்வாட்டர் அவென்யூ மற்றும் கவ்த்ரா சாலைக்கு அருகிலுள்ள ஒரு பொதுப் பள்ளியில் நடந்ததாகக் காவல்துறையினர் செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். ஆசிரியர் நான்கு மாணவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று வெளியேற விடாமல் தடுத்தார்.
36 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் மீது தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல் ஆகிய தலா நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதோடு பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்ற நடைமுறைகள் தொடர்வதால் குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது பீல் மாவட்ட பள்ளி வாரியத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.