துஷார உபுல்தெனியவுக்கு 25வரையில் விளக்கமறியல்
இலங்கையில் இதுபோன்ற குற்றவாளிகள் மிகவும் நுட்பமானவர்கள் என்றும், உயர் பதவிகளில் உள்ள நபர்கள் வேறு எவரையும் விட நுட்பமானவர்கள் என்பதால் விசாரணை நடவடிக்கைகளுக்காக மேலும் இரண்டு வாரங்கள் தேவையாகும்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட அத்துல திலக்கரத்ன என்ற நபர் தற்போது அந்த பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருவதுடன் அடுத்த வழக்கு விசாரணையின்போது நிதிமன்றம் மற்றும் முழு நாடும் ஆச்சரியமடையும் விடயங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி வேறு சிறைக்கைதிகளை விடுதலை செய்துள்ளமை தொடர்பான வழக்கு விசாரணை 12-06-2025 அன்று மீண்டும் இடம்பெற்றபோது, குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்துக்கு பதிலாக முறைப்பாட்டை முன்லைப்படுத்தி தெரிவிக்கையிலேயே மேலதிக சொலிசிட்ட ஜெனரால் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், சர்ச்சைக்குரிய சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நபர் தப்பிச்சென்றுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்டுவரும் விசாரணை முடிவடையவில்லை. அத்துடன் இந்த சம்பவம் வெறுமனே திடீரென இடம்பெற்ற சம்பவம் ஒன்று அல்ல. பல வருடங்களாக கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடி செயலாகும். அதனால் இதுதொடர்பான விசாரணைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியாது.
இலங்கையில் இதுபோன்ற குற்றவாளிகள் மிகவும் நுட்பமானவர்கள் என்றும், உயர் பதவிகளில் உள்ள நபர்கள் வேறு எவரையும் விட நுட்பமானவர்கள் என்பதால் விசாரணை நடவடிக்கைகளுக்காக மேலும் இரண்டு வாரங்கள் தேவையாகும். அதேநேரம் அடுத்த வழங்கு விசாரணை தவணையின்போது இந்த விசாரணை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சிக்குள்ளாகும் பல தகவல்களை வெளிப்படுத்துவேன் என்பதை மிகவும் பாெறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸ, சந்தேக நபரான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்காக மீண்டும் பிணை கோரியபோது அதனை நிராகரித்த பிரதான நீதிவான, எதிர்வரும் 25ஆம் திகதிவரை தொடர்ந்தும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை சிறைப்படுத்துமாறு உத்தரவிடடார். வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.