ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அமரவீர, லசந்த, துமிந்த கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்
அக்கட்சியின் சார்பான அனைத்து நிர்வாகிகளும் சில முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காக கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் திங்கட்கிழமை (25) தெரிவித்தன.
துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் மகிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதன்படி, திசாநாயக்க நிறைவேற்றுக் குழு பதவியிலிருந்தும், அழகியவண்ண பொருளாளர் பதவியிலிருந்தும், அமரவீர மூத்த துணைத் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் குடியரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று (30) முற்பகல் கொழும்புக்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து முக்கிய கூட்டமொன்றை நடத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அக்கட்சியின் சார்பான அனைத்து நிர்வாகிகளும் சில முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காகக் கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் திங்கட்கிழமை (25) தெரிவித்தன.
இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் எதிர்காலத்தில் புதிய கூட்டணியொன்று உருவாகவுள்ளதாகவும், இந்தச் செயற்பாடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.