Breaking News
ஒன்றாரியோவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனிதர் மொராக்கோவில் கைது
இந்த வார தொடக்கத்தில் பெல்ஜியத்தில் மற்றொரு தொடர் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மொராக்கோவைச் சேர்ந்த மனிதரைப் பெல்ஜியக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் ஒன்றாரியோ முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் மனிதர் ஒருவர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றாரியோ மாகாணக் காவல்துறையின் வியாழன் பிற்பகல் செய்தியின்படி, இந்த வார தொடக்கத்தில் பெல்ஜியத்தில் மற்றொரு தொடர் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மொராக்கோவைச் சேர்ந்த மனிதரைப் பெல்ஜியக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நவம்பர் 1 ஆம் தேதி, வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றாரியோ முழுவதும் பல பள்ளிகள் மூடப்பட்டு வெளியேற்றப்பட்டன.