துருக்கிய சட்ட அமைப்பில் சிக்கியிருந்த முதல் தேசப் பெண் மீண்டும் யூகோனுக்குத் திரும்பினார்
2020 இல் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு ஸ்மித் பல ஆண்டுகளாக சிறையில் இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துருக்கிய சட்ட அமைப்பில் சிக்கிய கார்கிராஸ்/டாகிஷ் முதல் தேசப் பெண் இறுதியாக யூகோன் வீட்டிற்கு வந்துள்ளார்.
சார்மன் ஸ்மித் வியாழக்கிழமை இரவு வைட்ஹார்ஸ் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காகக் காத்திருந்தனர்.
பழங்குடியின மக்களின் பேரவையின் (காங்கிரசு) கூற்றுப்படி, ஸ்மித் ஆப்பிரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பிச் சென்றபோது, இஸ்தான்புல்லில் உள்ள அட்டாடர்க் விமான நிலையத்தில் அவரது சாமான்களில் காட் (khat-ஒரு ஊக்க மருந்து) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நவம்பர் 2016 இல் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட மற்றும் அந்தஸ்து இல்லாத பழங்குடியின மக்களின் நலன்களுக்காக வாதிடும் பேரவையும், ஸ்மித்தும் போதைப்பொருட்கள் அவருக்குத் தெரியாமல் அவரது பைகளில் விதைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக துருக்கிய அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான கைதிகளை விடுவித்தபோது, 2020 இல் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு ஸ்மித் பல ஆண்டுகளாக சிறையில் இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
கார்க்ராஸ்/டாகிஷ் முதல் தேசம், பழங்குடியின மக்களின் காங்கிரஸ் மற்றும் வைட்ஹார்ஸில் உள்ள ஸ்கூக்கம் ஜிம் நட்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து, கனேடிய அரசாங்கத்தின் உதவி நிறுத்தப்பட்ட பிறகு, ஸ்மித்துக்கு நிதியுதவி அளித்தது. ஸ்மித் கனடாவுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.