15 ரூபாய் தகறாரில் கான்பூர் கடைக்காரரை அடித்து, பாஜக நகர் மன்ற உறுப்பினர் மிரட்டினார்
இந்தச் சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, நகர் மன்ற உறுப்பினர் கடைக்காரருடன் மற்றொரு காணொலி வெளியிட்டார்.
15 ரூபாய் தகறாரில் கான்பூர் கடைக்காரரைப் பாஜக நகர் மன்ற உறுப்பினர் சிகரெட் தகறாரில் அடித்துள்ளார். நகர் மன்ற உறுப்பினர் பவானிசங்கர் மற்றும் அவரது குழுவினர், வயதான கடைக்காரரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர்.
முதியோர் கடை உரிமையாளர் மீது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம், அலைபேசியில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
கான்பூரில் உள்ள சக்கேரியில் உள்ள அஜய் ராய் குப்தாவின் பான் கடையில், பாஜக நகர் மன்ற உறுப்பினர் சங்கரும் அவரது சகாக்களும் 30 ரூபாய்க்கு சிகரெட் வாங்கினாலும், 15 ரூபாய் மட்டுமே கொடுத்தனர் . மீதமுள்ள தொகையை கடைக்காரர் கேட்டபோது, சங்கரும் அவரது கூட்டாளிகளும் அவருடன் சண்டையிட்டனர்.
கஞ்சா விற்றதற்காக கடைக்காரரை சிறைக்கு அனுப்புவதாகவும் பாஜக நகர் மன்ற உறுப்பினர் மிரட்டினார். முதியவர் பணத்தைக் கேட்டார்.
இந்தச் சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, நகர் மன்ற உறுப்பினர் கடைக்காரருடன் மற்றொரு காணொலி வெளியிட்டார். மேலும் அவர்கள் காவல் நிலையத்தில் பரஸ்பர உடன்பாட்டை எட்டியதாக உறுதிப்படுத்தினார். இவ்விவகாரத்தில் இரு தரப்பினரும் புகார் அளிக்கவில்லை.
இருப்பினும், சமூக ஊடக பயனர்கள் இந்தக் காணொலிக்குப் பதிலளித்து, மாநிலத்தில் பாஜக ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்ததை உறுதிப்படுத்திய காவல்துறை, காவல்துறையினரின் தலையீட்டைத் தவிர்க்கச் சம்மதித்துச் சமரசம் செய்துகொண்டுள்ளனர் என்று தெரிவித்தது.