அரசியலை விட தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்தல்
உள்ளூர்க் கடன் மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான வாதங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்சியினரும் நாட்டின் சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்ளூர்க் கடன் மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பங்குபற்றி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் ஊக்குவித்தார். தேவைப்பட்டால் சபாநாயகருடன் கலந்தாலோசித்து எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் கடமைகளை வழங்குவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.