பாட்டலி மற்றும் கெஹலிய மீதான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு பிரதிவாதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 2023 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ பணிகளில் கலந்துகொள்வதற்காக தனது வாடிக்கையாளர் வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு பிரதிவாதி சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, ரம்புக்வெல்லவுக்கு மே 23 முதல் நவம்பர் 30 வரை பயணத் தடையை நீக்க அனுமதித்ததுடன், அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.