Breaking News
இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் சிறிலங்காவுக்கு பாரிய செலவை ஏற்படுத்தும் – சஜித்
இந்த விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட பிரேமதாச, தற்போது வரை, முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தொடர்புடைய சட்டமூலத்திற்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இணையவழிப் பாதுகாப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துவதன் விளைவாக சிறிலங்கா பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட பிரேமதாச, தற்போது வரை, முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தொடர்புடைய சட்டமூலத்திற்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆசிய இணையக் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட கவலைகள் குறித்துப் பேசிய பிரேமதாச, சிறிலங்கா இவ்வளவு பெரிய நிறுவனங்களை சீர்குலைக்கும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு ஊக்குவிக்கும் என்று கேள்வி எழுப்பினார்.