Breaking News
மணிப்பூரில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பதற்றமான சூழல்: காவல்துறை
வடகிழக்கு மாநிலத்தில் வன்முறைகள் தொடர்வதால், மாநிலம் முழுவதும் 118 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 326 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கட்டுக்கடங்காத கும்பல் ஒன்றுகூடிய சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்று காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான மாவட்டங்களில் நிலைமை சாதாரணமாக உள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலத்தில் வன்முறைகள் தொடர்வதால், மாநிலம் முழுவதும் 118 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 326 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில காவல்துறை மற்றும் மத்தியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.