கைது செய்யப்பட்ட ஆணின் கழுத்தில் மண்டியிட்ட காவல்துறை அதிகாரி மீதான தாக்குதல் குற்றச்சாட்டு நிறுத்தி வைப்பு
விமான நிலைய சம்பவத்தைத் தொடர்ந்து எரிக் கெரின் மீது சுமத்தப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டு நவம்பர் 3 அன்று வின்னிபெக் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
வின்னிபெக்கின் விமான நிலையத்தில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டபோது அந்த ஆண் "என்னால் சுவாசிக்க முடியவில்லை" என்று அழுதார். மூன்று நிமிடங்களுக்கும் மேலாக அவரின் கழுத்தில் தனது முழங்காலை வைத்த மனிடோபா ஆர்.சி.எம்.பி அதிகாரி இப்போது குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளவில்லை.
விமான நிலைய சம்பவத்தைத் தொடர்ந்து எரிக் கெரின் மீது சுமத்தப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டு நவம்பர் 3 அன்று வின்னிபெக் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் "விரிவான மறுஆய்வுக்குப் பிறகு" மாகாண நீதிமன்ற நீதிபதி பிரென்ட் ஸ்டூவர்ட் வழக்கறிஞர்கள் இந்த முடிவை எடுத்ததாக அரசு வழக்கறிஞர் ருஸ்டின் உல்ரிச் கூறினார்.
ஆகஸ்ட் 1, 2019 அன்று, வின்னிபெக் ரிச்சர்ட்சன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளியே அலைபேசிக் காணொலியில் பதிவான ஒரு சம்பவத்திலிருந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது, அங்கு கெரின் நாதன் லாசுயிக்கின் கழுத்தில் மண்டியிட்டு, கைது செய்யப்பட்டபோது அந்த மனிதரின் முகத்தை தரையில் வைத்ததைக் காண முடிந்தது.
2022 ஆம் ஆண்டில் கெரின் மீது தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு குற்றச்சாட்டு நிறுத்தி வைக்கப்படும்போது, அதை மீட்டெடுக்க அரசுக்கு ஒரு வருடம் உள்ளது. இது கெரின் விஷயத்தில் நடக்க வேண்டும் என்று ஸ்காட் நினைக்கிறார்.