Breaking News
உலக வறுமையை ஒழிக்க 200 ஆண்டுகள் தேவை: ஆய்வில் தகவல்
உலகின் ஐந்து செல்வந்தர்கள் 2020 முதல் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளனர். அதே நேரத்தில் உலகளவில் கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் மக்கள் மேலும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் வறுமை ஒரு பெரிய பிரச்சினையாகும், அதை ஒழிக்க கிட்டத்தட்ட 230 ஆண்டுகள் ஆகும் என்று ஆக்ஸ்பாம் அறிக்கையின் சமீபத்திய தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த அறிக்கையின்படி, உலகின் ஐந்து செல்வந்தர்கள் 2020 முதல் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளனர். அதே நேரத்தில் உலகளவில் கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் மக்கள் மேலும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் அடுத்த 230 ஆண்டுகளுக்குள் வறுமையை ஒழிப்பது கடினம். பெருநிறுவன உரிமை பெரும் பணக்காரர்களின் கைகளில் குவிவது ஒரு உலகளாவிய கவலையாகும்.