குயெல்ஃப் வீட்டில் தீ விபத்து: 2 பெண்கள் பலி
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்த மற்ற இருவர் தப்பிக்க முடிந்தது. புகையை சுவாசித்தல் மற்றும் சிறிய காயங்களுக்காக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக குயெல்ஃப் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
எடின்பரோ சாலை தெற்கு மற்றும் வில்சன்வியூ அவென்யூ பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர், அவர்கள் தீயை அணைத்தனர். ஆனால் காயமடைந்த இரண்டு வயது வந்த பெண்களை காப்பாற்ற முடியவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்த மற்ற இருவர் தப்பிக்க முடிந்தது. புகையை சுவாசித்தல் மற்றும் சிறிய காயங்களுக்காக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
குயெல்ஃப் காவல்துறை மற்றும் குயெல்ஃப் தீயணைப்புத் துறையுடன் இணைந்து விசாரணைக்கு உதவ ஒன்றாரியோ தீயணைப்பு மார்ஷல் அலுவலகம் அழைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் தோற்றம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.