வர்த்தக தடைகளைக் குறைப்பதற்கு சிறிலங்கா அர்ப்பணிப்புடன் உள்ளது: பிரதமர் தினேஷ் குணவர்தன
இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் சார்க் வர்த்தக சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்துள்ள தெற்காசிய வர்த்தக கண்காட்சி 2024 அண்மையில் கொழும்பில் ஆரம்பமானது.
தெற்காசிய பிராந்தியத்திற்குள் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் முயற்சியில் வர்த்தக தடைகளை முடிந்தவரை குறைக்கச் சிறிலங்கா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தெற்காசிய வர்த்தக கண்காட்சி 2024 இல் உரையாற்றிய அவர், மிகப்பெரிய பொருளாதார ஆற்றலைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வர்த்தகத்தில் நுழைய பிராந்தியத்தில் உள்ள தனியார்த் துறை வணிகங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் சார்க் வர்த்தக சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்துள்ள தெற்காசிய வர்த்தக கண்காட்சி 2024 அண்மையில் கொழும்பில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சார்க் செயலாளர் நாயகம் கோலம் சர்வார், சார்க் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் ஜாசிம் உதின், எப்சிசிஐ தலைவர் கீர்த்தி குணவர்தன, ஏனைய வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள், தெற்காசிய நாடுகளின் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, தெற்காசிய வர்த்தக கண்காட்சி 2024 இன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது.