கத்தியால் குத்தப்பட்டதில் டாக்சி ஓட்டுநர் பலத்த காயம்
ஒரு இளைஞர் தீவிரமான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் டாக்சி ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பில் ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியதையடுத்து,, 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரொறன்ரோ காவல்துறைச் சேவை தனது எக்ஸ் கணக்கில் இட்ட ஒரு பதிவில் , திங்கள்கிழமை இரவு 7:50 மணிக்கு முன்னதாகவே லோயர் ஷெர்போர்ன் தெரு மற்றும் தி எஸ்பிளனேட் பகுதிக்கு அவசரக் குழுக்கள் அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்று தெரிவித்தது.
கத்தியால் குத்தப்படுவதற்குச் சற்று முன்பு சந்தேகக் குற்றவாளிருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. சண்டைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் உடனடியாகத் தெரியவில்லை
ஒரு இளைஞர் தீவிரமான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
செவ்வாய்கிழமை காலை, இந்த வழக்கில் 23 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், வேறு சந்தேகக் குற்றவாளிகள் யாரும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.