ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.220 கோடி மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்
எம்வி தேபி (MV Debi) என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பல் எகிப்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, இந்தோனேசியாவில் உள்ள கிரேசிக்கு (Gresik) துறைமுகம் வழியாக இங்கு வந்தடைந்தது.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.220 கோடி மதிப்புள்ள கோகோயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
வியாழன் இரவு பரதீப் பன்னாட்டுச் சரக்கு முனையத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஒரு கிரேனில் சந்தேகத்திற்கிடமான இருபத்தி இரண்டு பொட்டலங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கிரேன் ஆபரேட்டர் அதைக் கண்டுபிடித்த பிறகு, அது வெடிக்கும் பொருளாக இருக்கலாம் என்று சந்தேகித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். சோதனைக்குப் பிறகு, அது கோகோயின் என உறுதி செய்யப்பட்டது.
எம்வி தேபி (MV Debi) என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பல் எகிப்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, இந்தோனேசியாவில் உள்ள கிரேசிக்கு (Gresik) துறைமுகம் வழியாக இங்கு வந்தடைந்தது. இங்கிருந்து இரும்புத் தகடுகளுடன் டென்மார்க் செல்ல திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"கப்பலில் இருந்த கிரேனில் இருந்து 22 பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. சிறப்பு கிட் மூலம் பரிசோதித்ததில் தூள் போன்ற பொருள் கோகோயின் என உறுதி செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் சர்வதேச சந்தை விலை ரூ. 200 கோடி முதல் ரூ. 220 கோடி வரை இருக்கும்." மாநில சுங்கத்துறை ஆணையர் மதாப் சந்திர மிஸ்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.