Breaking News
6 மாலுமிகளுடன் சிறிலங்கா மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர்
"லொரன்சோ புத்தா - 4" என்ற பல நாள் மீன்பிடிப் படகு ஜனவரி 12 ஆம் திகதி சிலாபம் டிக்கோவிட்ட (Dikowita) மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
சோமாலியாவில் 6 மாலுமிகளுடன் சென்ற சிறிலங்காவைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக மீன்வளத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அரபிக்கடலில் மீன்பிடி படகு மற்றும் பல சிறிலங்கா மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
"லொரன்சோ புத்தா - 4" என்ற பல நாள் மீன்பிடிப் படகு ஜனவரி 12 ஆம் திகதி சிலாபம் டிக்கோவிட்ட (Dikowita) மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
சிறிலங்காக் கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல் மைல் தொலைவில் இந்தக் கடத்தல் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.