ஜெய்ப்பூர் வருமான வரிச் சோதனையில் லாக்கர்களில் இருந்த கறுப்புப் பணம் பறிமுதல்
இரண்டாவது லாக்கரில் ஒரு சாக்கு மூட்டையில் பணத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
ஜெய்ப்பூரில் உள்ள கணபதி பிளாசா தனியார் லாக்கர்களில் கோடிக்கணக்கான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரையடுத்து, வருமான வரித் துறையின் குழு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த குழு தற்போது பிளாசாவில் உள்ள தனியார் லாக்கர்களில் சோதனை நடத்தி, ஏற்கனவே லாக்கர் ஒன்றில் இருந்து கணக்கில் வராத ரூ.7.5 லட்சம் பணத்தை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது லாக்கரில் ஒரு சாக்கு மூட்டையில் பணத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மேலும் சில லாக்கர்களை வருமான வரித்துறையினர் திறக்க உள்ளனர்.
அக்டோபர் 17-ம் தேதி மூன்று லாக்கர்களில் இருந்து சுமார் ரூ. 30 லட்சத்தை இந்த குழுவினர் மீட்டனர். அக்டோபர் 21-ம் தேதி லாக்கர்களில் இருந்து சுமார் ரூ.2.46 கோடியை வருமான வரித்துறையினர் மீட்டனர். லாக்கர்களில் இருந்து இதுவரை ரூ.7 கோடிக்கும் அதிகமான ரொக்கமும், 12 கிலோவுக்கும் அதிகமான தங்கமும் மீட்கப்பட்டுள்ளன.