சட்டவிரோத குடியேற்றம்: ஸ்பெயினில் புலம்பெயர்ந்தோர் வருகையால் சர்ச்சை
"புலம்பெயர்வு என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது சில பிரச்சினைகளுடன் வரும் ஒரு அவசியமாகும்," என்று சான்சேஸ் தெரிவித்தார்.
ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் உயர்ந்து வரும் அதிகரிப்பு சட்டவிரோதக் குடியேற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நாட்டில் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது
வியாழனன்று முடிவடைந்த மேற்கு ஆப்பிரிக்காவிற்கான ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செசின் மூன்று நாள் பயணத்தின் போது இந்தப் பிரச்சினை கவனத்தை ஈர்த்தது.
"பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான குடியேற்றத்திற்கு ஸ்பெயின் உறுதிபூண்டுள்ளது" என்று சோசலிஸ்ட் பிரதமர் செவ்வாய்க்கிழமை தனது சுற்றுப்பயணத்தின் முதல் நிறுத்தத்தில் மவுரித்தேனியாவின் தலைநகரான நவாக்சோட்டுக்கு வந்தவுடன் கூறினார்.
அறுவடைக் காலங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை முகங்கொடுக்கும் விவசாயம் போன்ற துறைகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்வதற்கு மக்களை சட்டபூர்வமாக ஸ்பெயினுக்குள் நுழைய அனுமதிக்கும் "வட்டப் புலம்பெயர்வு" திட்டங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
"புலம்பெயர்வு என்பது ஒரு பிரச்சினை அல்ல. அது சில பிரச்சினைகளுடன் வரும் ஒரு அவசியமாகும்," என்று சான்சேஸ் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கள் உடனடியாக ஸ்பெயினின் முக்கிய எதிர்க்கட்சியான பாப்புலர் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இது கேனரி தீவுகள் புலம்பெயர்ந்தோரின் வருகையை சமாளிக்க போராடும் நேரத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்க அதிகமான புலம்பெயர்ந்தோரை ஊக்குவிக்கும் என்று அது கூறியது.