மார்க்கெட் மாலில் கொள்ளையில் ஈடுபட்ட 3 இளைஞர்களுக்குக் கல்கரி காவல்துறை வலைவீச்சு
ஒரு ஊழியர் குழுவை எதிர்கொண்டபோது, சிறுவர்களில் ஒருவர் கத்தியை எடுத்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
திங்களன்று மார்க்கெட் மாலில் நடந்த ஒரு கொள்ளை மூன்று பதின்ம வயதுச் சிறுவர்களுக்குக் கல்கரி காவல்துறை வலைவீசித் தேடி வருகின்றனர்.
விக்டோரியா தினத்தன்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு விளையாட்டுக் கடையில் திருடிய மூவரும் பிடிபட்டதாகப் புலனாய்வாளர்கள் சிட்டிநியூசிடம் தெரிவித்தனர்.
ஒரு ஊழியர் குழுவை எதிர்கொண்டபோது, சிறுவர்களில் ஒருவர் கத்தியை எடுத்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
பின்னர் அந்த இளைஞர்கள் தப்பிச் சென்றனர், பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அவர்கள் கைவிட்டதாகக் காவல்துறையினர் நம்பினர்.
இந்த சம்பவத்தின் போது ஊழியர்கள் அல்லது கடைக்காரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சந்தேகக் குற்றவாளிகள் காவல்துறையினருக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அவர்கள் தற்போது பாதுகாப்புக் காணொலிக் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.