Breaking News
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால குழுவுக்கு எதிரான மனு புதன்கிழமை திரும்ப விசாரணைக்கு வரும்
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் நீதிமன்ற திகதி வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவுக்கு எதிரான மனுவை எதிர்வரும் புதன்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் நீதிமன்ற திகதி வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்சங்க பந்துல கருணாரத்னவினால் நியமிக்கப்பட்ட புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.