முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு ஆணைய சட்டமூலத்தை எதிர்க்கப் பல எதிர்க்கட்சிகள் முடிவு
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சமகி ஜன பலவேகய உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு இன்று முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தீர்மானித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
“முன்மொழியப்பட்ட சட்டம் ஜனநாயகத்தின் நான்காவது தூணான சுதந்திர ஊடகத்தை அழித்துவிடும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் என்பதை முழு உலகமும் அங்கீகரித்துள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.
“இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும், நீதித் துறையிலும் தோற்கடிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஒன்றிணைந்து இந்த இலக்கை அடைவதற்கு எமக்கு ஆதரவளிக்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்” என்று திரு பிரேமதாசா கூறினார்.