சிறிலங்காவுக்கு கடன் வழங்குநர்களுடனான இறுதி உடன்படிக்கைகளை விரைவாக பூர்த்தி செய்வது முக்கியம்: பன்னாட்டு நாணய நிதியம்
முன்னேற்றம் பற்றி கலந்துரையாடுவதற்காக சிரேஷ்ட தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான பன்னாட்டு நாணய நிதிய திட்டக் குழு ஜனவரி 11-19 வரை சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தது.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான இறுதி ஒப்பந்தங்களை விரைவாக முடிப்பது மற்றும் வெளிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒரு தீர்வை எட்டுவது சிறிலங்காவுக்கு முக்கியமானது என்று பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஏற்பாட்டின் கீழ் அண்மைய பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி கலந்துரையாடுவதற்காக சிரேஷ்ட தூதரகத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான பன்னாட்டு நாணய நிதிய திட்டக் குழு ஜனவரி 11-19 வரை சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தது.
வருகையின்போது அவதானிக்கப்பட்ட அதன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்ட தூதுக்குழுவினர், சிறிலங்கா அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு திட்டம் இப்போது 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நேர்மறையான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், அதிகரித்த வருவாய் சேகரிப்பு மற்றும் வெளிநாட்டு ஒதுக்குகளின் கட்டியெழுப்பல் ஆகியவற்றுடன் மீட்சிக்கான முதல் அறிகுறிகளை வழங்கியுள்ளது.