காற்று மாசுபாடு மூளையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: புதிய ஆய்வு
காற்று மாசுபாடு அதிக அளவு மன அழுத்தம், மன உளைச்சல், முதுமை மறதி மற்றும் மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரியில், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாசுபாட்டின் விளைவுகளையும், மிதமான போக்குவரத்து மாசுபாட்டையும் வெளியிட்டனர்.
சுற்றுச்சூழல் ஆரோக்கியம் இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் கண்டுபிடிப்புகள், டீசல் மாசுபாட்டிற்கு வெளிப்பட்ட சில மணிநேரங்களில் நமது மூளையின் இணைப்புகளின் வலை பலவீனமடையும் என்பதை வெளிப்படுத்தியது.
வெறும் இரண்டு மணிநேர காற்று மாசுபாடு நமது மூளையின் இணைப்பை சீர்குலைக்கும்.
ஆய்வில், செயல்பாட்டு காந்த அதிர்வு வரைபடத்தைப் (இமேஜிங்) பயன்படுத்தி ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு வயது வந்தவரின் மூளை செயல்பாடு கவனிக்கப்பட்டது.
"பல பத்து ஆண்டுகளாக, காற்று மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து மூளை பாதுகாக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் நினைத்தனர். உலகில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த ஆய்வு, காற்று மாசுபாட்டிற்கும் அறிவாற்றலுக்கும் இடையிலான தொடர்பை ஆதரிக்கும் புதிய ஆதாரங்களை வழங்குகிறது" என்று மூத்த ஆய்வு ஆசிரியர் டாக்டர் கிறிஸ் கார்ல்ஸ்டன் கூறினார்.
"உங்கள் காரின் காற்று வடிப்பான் (ஏர் ஃபில்டர்) நன்றாக வேலை செய்வதை நீங்கள் உறுதி செய்வது முக்கியம். நீங்கள் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள தெருவில் நடந்து சென்றாலோ அல்லது பைக்கில் சென்றாலோ, குறைவான போக்குவரத்து நெரிசல் உள்ள பாதையில் திசை திருப்ப நீங்கள் பரிசீலியுங்கள்" என்று டாக்டர் கிறிஸ் கார்ல்ஸ்டன் கூறினார்.
காற்று மாசுபாடு அதிக அளவு மன அழுத்தம், மன உளைச்சல், முதுமை மறதி மற்றும் மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க மனநல சங்கத்தின் கூற்றுப்படி, காற்று மாசுபாடு குழந்தைகளின் மூளை மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.