Breaking News
சிரோவில் அங்கன்வாடி வேலைகள் வாங்கி தருவதாகக் கூறி 20 பெண்களின் மீது கூட்டுப் பாலியல் தாக்குதல்
அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 20 பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் சிரோஹி நகராட்சி மன்றத் தலைவர் மகேந்திர மேவாடா மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற ஆணையர் மகேந்திர சவுத்ரி ஆகியோர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 20 பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், காவல்துறையை அணுகியதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னையும் சுமார் 20 பெண்களையும் வேலை வாய்ப்பு தருவதாகஆசை வார்த்தை கூறிக் கவர்ந்ததாகக் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.