மே 9 வன்முறையைத் தடுக்கத் தவறியது தொடர்பில் 73 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: திரான் அலஸ்
கடமை தவறியதாக இனங்காணப்பட்ட 62 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 6 பரிசோதகர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கும் பணியில் 73 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி சபையில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்து, கடமை தவறியதாக இனங்காணப்பட்ட 62 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 6 பரிசோதகர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ராராச்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவர்களுக்கு எதிராக தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். "தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் விபச்சார விடுதிகளை நடத்துவது போன்ற பிற குற்றங்களைச் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர்கள் மீது தனி விசாரணைகள் நடத்தப்படுகின்றன," என்றும் அவர் கூறினார்.