Breaking News
பாதிரியார் ஜெரோம் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மீண்டும் மன்னிப்புக் கோரினார்
சமூக ஊடகங்களில் வைரலான அவரது பிரசங்கம் ஒன்றில் புத்தர் மற்றும் பிற மதப் பிரமுகர்களைப் பற்றி இழிவான அறிக்கைகளை வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
"தீர்க்கதரிசி" என்று சொல்லிக் கொள்ளும் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ, புத்தர் மற்றும் பிற மதப் பிரமுகர்கள் குறித்து சமீபத்தில் கூறிய கருத்துக்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான அவரது பிரசங்கம் ஒன்றில் புத்தர் மற்றும் பிற மதப் பிரமுகர்களைப் பற்றி இழிவான அறிக்கைகளை வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
இவ்வாறான அறிக்கைகள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டில் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதாகக் குறிப்பிட்டு, இது தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.