Breaking News
கிரிக்கெட் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்
ஆளும் கட்சி எம்.பி.க்களுடன் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதியரசர் கே.டி.சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக சபைக்கான அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு சிறந்த தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி எம்.பி.க்களுடன் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அரச தலைவர், இந்த விடயத்தில் தாம் பக்கச்சார்பற்றவராக இருப்பதாகவும், தான் கிரிக்கெட்டின் பக்கம் இருப்பதாகவும் கூறினார்.
இடைக்காலக் குழுக்களை நியமிப்பது ஒரு கட்டுக்கோப்பான தீர்வாகும் என்றும், இந்தப் பிரச்சினைக்கு போதுமான தீர்வு காண போதுமானதாக இருக்காது என்றும் ஜனாதிபதி கருதுகிறார்.