வேதாரண்யம் கடற்கரை அருகே சிறிலங்கா மீனவர்கள் 3 பேர் கைது
கடலோர பாதுகாப்புக் குழுவினர், வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்காடுதுறை அருகே மணியன்தீவிலிருந்து 3 கடல் மைல் தொலைவில் அவர்களைக் கண்டுபிடித்து மீட்டனர்.
ஆகஸ்ட் 9, 2023 புதன்கிழமை அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை அருகே மூன்று சிறிலங்கா மீனவர்கள் தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுவால் கைது செய்யப்பட்டனர். இயந்திரக் கோளாறு காரணமாக அவர்கள் நடுக்கடலில் மீன்பிடிப் படகில் தத்தளித்தனர்.
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகள் அவர்கள் சிறிலங்காவில் உள்ள யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பி ரீகன், 40, எஸ் சிவக்குமார், 25, மற்றும் ஏ ஸ்ரீகாந்தன், 37 என அடையாளம் கண்டுள்ளனர். மீனவர்கள் 3 பேரும் ஆகஸ்ட் 6-ம் தேதி இயந்திரக் கப்பலில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர்.
கடலோர பாதுகாப்புக் குழுவினர், வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்காடுதுறை அருகே மணியன்தீவிலிருந்து 3 கடல் மைல் தொலைவில் அவர்களைக் கண்டுபிடித்து மீட்டனர்.
பின்னர், அவர்களைக் கைது செய்து வேதாரண்யம் கடல்சார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.