Breaking News
தென்னகோன் மீதான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்
தேசபந்து தென்னகோனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடை ஜூலை 7 அன்று நீக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடை ஜூலை 7 அன்று நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள “கோட்டா கோ கம” எதிர்ப்பு தளத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.