பழைய வழக்கில் அபராதத்துடன் ஜெயபிரதாவுக்கு 6 மாதம் சிறை
சென்னையில் ஜெயபிரதாவுக்கு சொந்தமான திரையரங்கம் மூடப்பட்டது. பின்னர், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ தொகையை ஜெயபிரதா தரவில்லை எனத் திரையரங்க ஊழியர்கள் ஜெயா மீது புகார் தெரிவித்தனர்.
பழம்பெரும் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதா குற்றவாளி என சென்னை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது திரையரங்கில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ பணத்தை வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு ₹5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது தொழில் கூட்டாளிகளான ராம் குமார் மற்றும் ராஜா பாபு ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் ஜெயபிரதாவுக்கு சொந்தமான திரையரங்கம் மூடப்பட்டது. பின்னர், சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ தொகையை ஜெயபிரதா தரவில்லை எனத் திரையரங்க ஊழியர்கள் ஜெயா மீது புகார் தெரிவித்தனர். தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்திற்கு இஎஸ்ஐ பணம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.
சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் ஜெயபிரதா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் வழக்குப் பதிவு செய்தது. ஜெயபிரதாவும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் என்றும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் போது நீண்ட நிலுவைத் தொகையை செலுத்துவதாக உறுதியளித்தார் என்றும் அது பரிந்துரைத்தது. ஆனால், நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்து அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்தது.