அடுத்த தலைமுறைக்கு நல்லிணக்க பணியை வழங்குவது ஜனாதிபதியின் குறிக்கோள் அல்ல: ஜனாதிபதியின் செயலாளர்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான சிவில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடலின் போதே ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது அல்ல, அதற்கு இப்போதே தீர்வு காண்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய தேவை வலுவாக உள்ளதாகவும், இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் மேலும் ஒரு வருடத்திற்கு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு நாடு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார். என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான சிவில் சமூக விழிப்புணர்வு கலந்துரையாடலின் போதே ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் நோக்கங்களை வெளிவிவகார அமைச்சர் விளக்கினார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பங்கு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏகநாயக்க. ஆணைக்குழுவின் ஸ்தாபனத்தின் நோக்கங்களை அடைவது தொடர்பில் கலந்துகொண்ட சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு நாடாக முன்னேற அனைத்து குடிமக்களின் உடன்பாடும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.