Breaking News
மலேசியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிலங்கா நாட்டுத் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்
33 மற்றும் 35 வயதுடைய திருமணமான தம்பதியினர், மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வந்ததாகவும், கோலாலம்பூர் நகரில் மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 சிறிலங்கா நாட்டுக் குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
33 மற்றும் 35 வயதுடைய திருமணமான தம்பதியினர், மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வந்ததாகவும், கோலாலம்பூர் நகரில் மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், விபத்தின் போது காரில் இருந்த தம்பதியின் மகள் காயமின்றி இருந்தார். அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.