Breaking News
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கிப் பலி
1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த தேவரப்பெரும, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று மாலை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இரண்டு மின்சார சுற்றுகளை இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த தேவரப்பெரும, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அவருக்கு உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.